உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

புதுக்கோட்டையில் 24-ந்தேதி சிறப்பு கிராமசபை கூட்டம்

Published On 2022-04-15 09:19 GMT   |   Update On 2022-04-15 10:22 GMT
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 24ந்தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது

நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 24 ந்தேதி அன்று நடைபெறவுள்ளது.  

இந்த கிராம சபைக் கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து உறுதிமொழி எடுத்திடவும், கூட்டப்பொருள்களின் அடிப்படையிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.  

ஊராட்சியில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து பயன்பெறும் வகையில் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News