ஆன்மிகம்
இயேசு

தேவனை ஏமாற்ற முடியாது

Published On 2020-09-16 07:33 GMT   |   Update On 2020-09-16 07:33 GMT
பைபிளில் 1 யோவான் முதலாம் அதிகாரம் 17-ம் வசனத்தில், இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சலக பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒரு பெண் மற்றொரு பெண்ணின் கோழியை திருடி விட்டாள். இந்த திருட்டு சம்பவம் குறித்த வழக்கு நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அந்த பெண் நான் கோழியை திருடவில்லை. அந்த பெண் என் மீது வீண் பழி சுமத்துகிறாள் என்று கூறினார். உடனே நீதிபதி இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து இன்னொரு நாள் விசாரணை நடத்துகிறேன் என்று கூறினார்.

உடனே அவர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வர சில அடிகள் எடுத்து வைத்தனர். அப்போது அங்கிருந்த நீதிபதி பக்கத்தில் இருந்த ஒருவரை பார்த்து, பார்த்தீர்களா? கோழியை திருடி தின்று விட்டு அதன் இறகை தலையிலே வைத்துக் கொண்டு, கோழியை நான் திருடவில்லை என்று சாதித்து விட்டாளே என்று அந்த பெண்ணின் காதில் கேட்கும்படியாக கூறினார்.

இதை கேட்டதும் அந்த பெண் தன் கூந்தலை மெதுவாக தடவி பார்த்தாள். அவ்வளவுதான், நீதிபதி உடனே அவளை அழைத்துவரச்செய்து அவளுடைய வாயில் இருந்தே அந்த திருட்டை ஒப்புக்கொள்ள வைத்தார். இதே போல தான் இயேசுவின் சீடர் யூதாஸ் என்பவரை பார்த்து நீ, என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று கூறினார். ஏன் இப்படி கூறினார் என்றால் யூதாஸ் என்பவர் இயேசுவை சிலுவையில் அறையும் படி தேடிக்கொண்டிருந்தவர்களிடம் இவர்தான் இயேசு என்று காட்டிக்கொடுத்தார்.

ஆனால் நான் இயேசுவை காட்டிக்கொடுக்கவில்லை என்று மூன்று முறை மறுப்பு தெரிவித்தார். இதைத்தான் இயேசுவானவர் யூதாஸ் என்றும் சீடர் தன்னை காட்டிக்கொடுப்பதற்கு முன்பதாகவே அவரிடம் நீ என்னை முன்று முறை மறுதலிப்பாய் என்று கூறினார். ஆம், தேவ பிள்ளைகளே நாமும் இந்த உலகத்தில் பல்வேறு குற்றங்களை செய்து விட்டு அதை நாம் மறைத்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

ஆனால் நாம் குற்றம் செய்யவில்லை என்று மனிதர்களை ஏமாற்றலாம், தேவனை ஏமாற்ற முடியாது. தன்னை காட்டிக்கொடுத்த சீடரை முன்கூட்டியே அறிந்தது போல, நாம் செய்யும் குற்றங்களையும் அவர் அறிந்திருக்கிறார் என்று நாம் மறந்து போகக்கூடாது. அதனால் தான் நம்முடைய பாவங்களுக்காக கல்வாரி சிலுவையிலே ரத்தம் சந்தி தன் உயிரையை பலியாக கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பைபிளில் 1 யோவான் முதலாம் அதிகாரம் 17&ம் வசனத்தில், இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சலக பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நாம் இதுவரை செய்த குற்றங்களை அவரிடத்தில் அறிக்கையிட்டு குற்றங்களை மன்னியும் என்று இந்த தவக்காலத்தில் தேவனிடத்தில் மன்னிப்பை பெற்று, குற்ற உணர்வு இல்லாத மகிழ்வான வாழ கற்றுக்கொள்வோம்.

ரபிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.

Tags:    

Similar News