செய்திகள்
கோப்புபடம்

ஜோலார்பேட்டை அருகே வாக்குபதிவு போது தகராறு செய்த 3 பேர் மீது வழக்கு

Published On 2021-10-08 11:42 GMT   |   Update On 2021-10-08 11:42 GMT
ஜோலார்பேட்டை அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளுக்கு நேற்றுமுன்தினம் வாக்குபதிவு நடைபெற்றது. இதனையொட்டி ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு ஊராட்சியில் 6 வார்டுகளுக்கு அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அப்போது மண்டலவாடி பஸ் நிறுத்தம் பகுதியில் வாக்களிக்க பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். அங்கு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த 3 பேரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள் 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News