செய்திகள்
கைது

பேரளம் அருகே சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட தந்தை-மகன் கைது

Published On 2021-06-07 10:30 GMT   |   Update On 2021-06-07 10:30 GMT
பேரளம் அருகே சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட தந்தை-மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரளம்:

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது அருந்துபவர்கள் சிலர் திருட்டுதனமாக கள்ளச்சாராயம் காய்ச்ச முயற்சி செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்ச ஊறல்போட்ட தந்தை-மகன் கைது செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பற்றிய விவரம் வருமாறு:-

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பழையனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 60). இவரது மகன் விமல்ராஜ் (30). இவர்கள் இருவரும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வீட்டில் அதற்கான பொருள்களை வாங்கி வந்து ஊறல்போட்டு உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவநேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசைதம்பி, விமல்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறவைத்த ஊறல்களை அழித்தனர்.

Tags:    

Similar News