ஆன்மிகம்
விநாயகர்

சதுர்த்தி விழாவையொட்டி கடலூர் வலம்புரி விநாயகர் கோவிலில் நாளை சாமி வீதி உலா

Published On 2021-09-09 07:03 GMT   |   Update On 2021-09-09 07:03 GMT
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
கடலூர் கூத்தப்பாக்கத்தில் வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று சாமி வீதிஉலா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் விநாயகர் வீதி உலா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News