செய்திகள்
நகை கொள்ளை

டாக்டர் வீட்டில் 26½ பவுன் நகை திருட்டு- போலீசார் விசாரணை

Published On 2021-04-12 11:06 GMT   |   Update On 2021-04-12 11:06 GMT
டாக்டர் வீட்டில் 26½ பவுன் தங்க நகைகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி பிரியதர்‌ஷினி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 41). டாக்டர். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுடன் கவுசல்யாவின் தங்கை கிரி‌‌ஷ்மா வசித்து வருகிறார்.

இந்தநிலையில் பாலசுப்ரமணியன் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 26½ பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து கோரிமேடு போலீசில் பாலசுப்ரமணியன் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்படாமல் இருந்தது. எனவே அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News