உள்ளூர் செய்திகள்
தென்னை மட்டை விழுந்ததில் மின் வயர் அறுந்து விழுந்து தொழிலாளி பலி போச்சம்பள்ளி அருகே சோகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தென்னை மட்டை விழுந் ததில் மின் வயர் அறுந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி அருகே உள்ள விருப்பம் பட்டி கிராமத்தில் பழனி என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பு உள்ளது. இந்த தோப் பில் நாகரசம்பட்டி அடுத்த கமக் காலக்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதன் (வயது 65) என்பவர் தேங்காய் எடுக்க குத்தகை பேசி தேங்காய் வெட்டி வந் துள் ளார்.
மின்சாரம் தாக்கி பலி.
இந்த நிலையில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் தேங் காய் விழுந்திருக்கும் என்று மாதன், தென்னந் தோட்டத்திற்கு வந்துள்ளார், அப்போது எதிர் பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து தென்னை மட்டை விழுந்து மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக் காமல் மாதன் நடந்து சென்ற போது மின் வயரை மிதித்து அங்கேயே பரிதாபமாக துடி துடித்து இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், உடலை மீட்டு போச்சம்பள்ளி போலீ சாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.