செய்திகள்
கொரோனா பரிசோதனை

வாணியம்பாடி நகராட்சி சார்பில் தேவையின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-06-08 14:36 GMT   |   Update On 2021-06-08 14:36 GMT
நேதாஜிநகர், பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் நின்று முக கவசம் அணியாமல் வாகனங்களில் வருவோரை தடுத்து நிறுத்தியும், சாலையில் நடந்து செல்பவர்களை பிடித்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர் தலைமையில் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்கள், இருசக்கர வாகனங்களில் வருபவர்களை பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் கச்சேரி ரோடு, மேட்டுப்பாளையம், நேதாஜிநகர், பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் நின்று முக கவசம் அணியாமல் வாகனங்களில் வருவோரை தடுத்து நிறுத்தியும், சாலையில் நடந்து செல்பவர்களை பிடித்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதனால் பல வாகனங்களில் வந்தவர்கள் பாதி வழியிலேயே திரும்பி சென்றனர். இருப்பினும், தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர் அப்போது சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், அலி மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News