உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2022-01-12 10:23 GMT   |   Update On 2022-01-12 10:23 GMT
அதிகபட்சமாக மதுரைக்கு 80 பஸ்களும், சேலம், திருச்சி மார்க்கமாக 50 பஸ்களும் உட்பட 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பூர்:

பொங்கலை முன்னிட்டு நாளை 13-ந்தேதி முதல் வரும் 16-ந் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிமாவட்டத்தினர் அவரவர் சொந்த ஊர் செல்ல வசதியாக திருப்பூர் புதிய பஸ் நிலையம், கோவில்வழி, யுனிவர்சல் தியேட்டர் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதிகபட்சமாக மதுரைக்கு 80 பஸ்களும், சேலம், திருச்சி மார்க்கமாக 50 பஸ்களும் உட்பட 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ் இயக்கத்தை கண்காணிக்க பஸ் நிலையத்திற்கு  நான்கு கண்காணிப்பு மற்றும் இயக்க குழு வீதம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

பஸ்கள் புறப்படும் நேரம், டிரைவர், நடத்துனர் செயல்பாடுகள் குறித்து இவர்கள் கண்காணிப்பர். ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் பயணிகள் புகார் தெரிவிக்க தகவல் மையமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News