ஆன்மிகம்
ராஜ அலங்காரத்தில் பைரவர் அருள்பாலிப்பதையும், சாமி தரிசனம் செய்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2019-06-26 04:25 GMT   |   Update On 2019-06-26 04:25 GMT
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின் போது 5 கால சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இம்மாதத்துக்கான சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது.

இதையொட்டி சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனப்பொடி, அரிசிமாவு, பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட செவ்வரளி உள்ளிட்ட மலர்களை கொண்டு ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளினார்.

அப்போது கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News