செய்திகள்
மணல்

மணலூர்பேட்டை அருகே மணல் கடத்தல்- வாலிபர் கைது

Published On 2021-11-01 16:29 GMT   |   Update On 2021-11-01 16:29 GMT
மணலூர்பேட்டை அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

மணலூர்பேட்டை அருகே பள்ளிசந்தல் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 மோட்டார் சைக்கிள்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவி்ட்டு தப்பி ஓடிவிட்டார். இன்னொருவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் பள்ளிச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் அய்யனார்(வயது 21), தப்பி ஓடியவர் ஏழுமலை மகன் பாலாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து அய்யனாரை கைது செய்த போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பாலாஜியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News