செய்திகள்
மது

இந்தியாவில் மது அருந்தும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலம்?

Published On 2020-10-28 15:58 GMT   |   Update On 2020-10-28 15:58 GMT
இந்தியாவில் மதுபானம் அருந்தும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் பட்டியலில் அசாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் நவீன காலகட்டத்தில் தற்போது ஆண்களைப் போலவே பெண்களும் மது அருந்தும் பழக்கை வளர்த்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் அதிகமாக மதுபானங்களை அருந்தும் பெண்கள் உள்ள மாநிலங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் 2019-20-ம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 26.3% பெண்கள் மதுபானம் அருந்துவது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களே மது அருந்துகின்றனர். ஆனால் மற்ற மாநிலங்கள் அனைத்திலும் மதுகுடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 10% கீழ் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2005-06 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் அங்கு மது குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 7.5% அக மட்டுமே இருந்தது. அந்த காலகட்டத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் 33% பெண்களும் சிக்கீம் 19% பெண்களும், சட்டீஸ்கரில் 11.4% பெண்களும் மதுபானங்களை குடித்து வந்தனர்.

தற்போது இந்த மாநிலங்கள் அனைத்திலும் மதுகுடிக்கும் பெண்கள் குறைந்துள்ள நிலையில் அசாமில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் மதுகுடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 26.3% ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் தேசிய அளவில் ஒப்பிடும்போது அருணாச்சல் பிரதேசத்தில் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள 35.6%  ஆண்கள் மதுபானங்களை குடித்து வருகின்றனர். வாரத்துக்கு ஒரு முறை மதுபானம் குடிக்கும் பெண்கள் பட்டியலிலும் 44.8% உடன் அசாம் முதலிடத்தில் உள்ளது.
Tags:    

Similar News