ஆன்மிகம்
வடசேரி சக்தி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

வடசேரி சக்தி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

Published On 2020-11-28 06:32 GMT   |   Update On 2020-11-28 06:32 GMT
வடசேரி, ரவிவர்மன் வடக்கு புதுதெருவில் உள்ள குடல் பிணி தீர்க்கும் சர்வ சக்தி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா, கொடை விழா நடந்தது.
வடசேரி, ரவிவர்மன் வடக்கு புதுதெருவில் உள்ள குடல் பிணி தீர்க்கும் சர்வ சக்தி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா, கொடை விழா நடந்தது. இதையொட்டி விழாத்தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமையில் கும்ப நீர் எடுத்து வரப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா கலந்து கொண்டார்.

விழாவில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு அலங்கார தீபாராதனை, பூப்படைப்பு, மங்கல தீபாராதனை போன்றவை நடந்தன. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சர்வ சக்தி சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News