ஆன்மிகம்
எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கருடசேவை

எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கருடசேவை

Published On 2020-09-21 06:46 GMT   |   Update On 2020-09-21 06:46 GMT
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது.

இரவில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது சிறப்பு தீபாராதனை நடந்தது. கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.

உலக நன்மைக்காகவும், கொரோனா நோய் தாக்குதலில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும், சிறப்பு யாகமும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து கஜபூஜை, கோ பூஜையும் நடக்கிறது.
Tags:    

Similar News