செய்திகள்
கைது

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

Published On 2021-09-19 09:40 GMT   |   Update On 2021-09-19 09:40 GMT
வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்த முத்துமாரியப்பன் (வயது 40) , சிலம்பரசன் (35) , சிதம்பரம் (40), கருப்புசாமி (42) ஆகியோர்களிடமிருந்து தலா 20 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
Tags:    

Similar News