உள்ளூர் செய்திகள்
திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:
திருச்சி பாலக்கரை ரயில்வே குட்ஷெட் அருகே அதிகமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவத்தன்று பாலக்கரை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி முதலியார் சத்திரம் ரெயில்வே குட்செட் அருகே இரவு நேரத்தில் வாலிபர்கள் 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் நின்றுகொண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து பாலக்கரை போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த எழிலரசன் வயது27, பாலக்கரை பகுதியை சேர்ந்த ஆகாஷ், ஆரோக்கிய செல்வகுமார்ஆகிய 3 பேர் என்பதும் இவர்கள் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் இருந்து 2கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பாலக்கரை போலீஸ்£ர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.