செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கிராமப் பகுதிகளில் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்யலாம்- ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-07-28 11:04 GMT   |   Update On 2021-07-28 11:04 GMT
அங்கன்வாடி மையங்களை திறந்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை:

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு சத்துணவு போன்றவை வழங்கப்பட வில்லை.

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று சமூக அமைப்பு ஒன்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராமப் பகுதிகளில் தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

அங்கன்வாடி மையங்களை திறந்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்தும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
Tags:    

Similar News