செய்திகள்
மழையால் நிரம்பும் பண்ணைக்குட்டைகள்
வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளில் மழை நீர் நிரம்பியுள்ளது.
வெள்ளக்கோவில்,
வெள்ளக்கோவில் பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதால், மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வேளாண் துறை மூலம் மானிய விலையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிநபர் பூமிகளில் 200க்கும் அதிகமான பண்ணைக் குட்டைகள் உள்ளன. தற்போது பெய்த மழையால் பண்ணைக் குட்டைகள் படிபடியாக நிரம்பி வருகின்றன. இதனால் அருகிலுள்ள திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.