செய்திகள்
மின்தடை

கந்தர்வக்கோட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2019-11-07 13:45 GMT   |   Update On 2019-11-07 13:45 GMT
கந்தர்வக்கோட்டையில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கந்தர்வக்கோட்டை:

கந்தர்வக்கோட்டை மின்வாரிய உதவிசெயற் பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

பழைய கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை,புதுப்பட்டி மற்றும் மங்களாக் கோவில் ஆகிய துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 8 ந்தேதி வெள்ளிகிழமை நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர்,தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்க நாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வக் கோட்டை, அக்கச்சிப் பட்டி,  கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, பல்லவராயன்பட்டி, பழையகந்தர்வக்கோட்டை, பிசானத்தூர், துருசுப்ட்டி, மெய்குடிப்பட்டி, ஆத்தியாடிப்பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல்  மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News