ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள பல்வேறு இடங்களில் மாலை 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அகல் விளக்கு நெய் தீபம் ஏற்றப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கார்த்திகை தீப உற்சவம் நடக்கிறது. அதையொட்டி கோவிலில் இன்று மாலை கைங்கர்யங்கள், நிவேதனம் செய்ததும் ஆனந்த நிலையத்தில் ஆரத்தி காண்பிக்கப்படுகிறது.
இதையடுத்து மூலவர் கருவறை மற்றும் இதர சன்னதிகளில் தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள பல்வேறு இடங்களில் மாலை 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அகல் விளக்கு நெய் தீபம் ஏற்றப்படுகிறது.
இதனால் இன்று கோவிலில் நடக்கும் சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது, எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மூலவர் கருவறை மற்றும் இதர சன்னதிகளில் தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள பல்வேறு இடங்களில் மாலை 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அகல் விளக்கு நெய் தீபம் ஏற்றப்படுகிறது.
இதனால் இன்று கோவிலில் நடக்கும் சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது, எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.