செய்திகள்
பள்ளி மாணவ-மாணவிகள்

கொரோனா விழிப்புணர்வு குறும்பட போட்டி

Published On 2021-10-09 13:34 GMT   |   Update On 2021-10-09 13:34 GMT
சிங்கம்புணரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்காக கொரானா தொற்று பற்றிய விழிப்புணர்வு குறும்பட போட்டி நடத்தப்பட்டது.
சிங்கம்புணரி:

சிங்கம்புணரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்காக கொரானா தொற்று பற்றிய விழிப்புணர்வு குறும்பட போட்டி நடத்தப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் உயிரை காக்க எங்கும் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றுவது பற்றிய குறிப்புகளோடு குறும்பட போட்டி நடைபெற்றது. 121 மாணவ-மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் 10 மாணவர்கள் சிறப்பாக செய்து விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற மற்ற நபர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை வெற்றிச்செல்வி, ராஜமாணிக்கம் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி பொறுப்பாளர் கிருஷ்ணன், தலைமையாசிரியர் ஷியாம், நிர்வாகி சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் பாரிவள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் வெற்றிச்செல்வி, ராஜமாணிக்கம் மற்றும் சாந்தி செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News