செய்திகள்
நகை பறிப்பு

தர்மபுரி அருகே ஆட்டோ டிரைவரிடம் நகை பறிப்பு

Published On 2021-03-02 02:05 GMT   |   Update On 2021-03-02 02:05 GMT
தர்மபுரி அருகே ஆட்டோ டிரைவரிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நபி (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் தர்மபுரியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி விட்டனர். இதுபற்றி, நபி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News