செய்திகள்
அ.தி.மு.க. வேட்பாளர் வே.சம்பத்குமாருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய போது

அரூர் தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது - சம்பத்குமார் எம்.எல்.ஏ. வெற்றி

Published On 2021-05-03 18:05 GMT   |   Update On 2021-05-03 18:05 GMT
அரூர் சட்டமன்ற தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக வே.சம்பத்குமார் வெற்றி பெற்றார்.
தர்மபுரி:

தமிழக சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டம் அரூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட வே.சம்பத்குமார் 99 ஆயிரத்து 61 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் குமார் 68 ஆயிரத்து 699 வாக்குகள் பெற்றுள்ளார்.

அரூர் தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வே.சம்பத்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 2-வது முறையாக போட்டியிட்ட அவர் 30 ஆயிரத்து 362 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இந்த தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றி உள்ளது.

அரூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள்- 2,49,796

பதிவான வாக்குகள்-1,98,565

வே.சம்பத்குமார் (அ.தி.மு.க.) -99,061

ஏ.குமார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) -68,699

ஆர்.முருகன் (அ.மு.மு.க.) - 14,327

கே.கீர்த்தனா (நாம் தமிழர் கட்சி) -10,950

எஸ்.சதீஷ்குமார் (ஐ.ஜே..கே) -282

நோட்டா வாக்குகள்-2,249

இந்த தொகுதியில் பெறப்பட்ட தபால் வாக்குகளில் 423 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. அரூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் வே.சம்பத்குமாருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முத்தையன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
Tags:    

Similar News