வழிபாடு
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2022-03-26 04:23 GMT   |   Update On 2022-03-26 04:23 GMT
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிப்பவர் சொர்ண ஆகர்ஷண பைரவர்.

நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட சந்தனம், மஞ்சள், திருமஞ்சனபொடி, பால், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.

பின்னர் சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா என சரணகோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டு சென்றனர்.
Tags:    

Similar News