ஆன்மிகம்
காலபைரவருக்கு பூஜை

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் காலபைரவருக்கு அஷ்டமி விழா

Published On 2021-09-01 07:11 GMT   |   Update On 2021-09-01 07:11 GMT
கால பைரவருக்கு சிறப்பு பால் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா ஆராதனையும் வழிபாடும் நடந்தன.
மயிலாடுதுறை ஆன்மிக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் கால பைரவருக்கு அஷ்டமி விழா நடந்தது.

விழாவில் கால பைரவருக்கு சிறப்பு பால் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா ஆராதனையும் வழிபாடும் நடந்தன. இதனையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

விழாவில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவையின் நிறுவனர் வக்கீல் ராம.சேயோன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News