ஆன்மிகம்
சவுடேஸ்வரி அம்மன்

நவராத்திரி விழாவையொட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-10-09 08:12 GMT   |   Update On 2021-10-09 08:12 GMT
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையில் சவுடேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராசிபுரம் குஞ்சு மாரியம்மன் கோவில் தெருவில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி சாமிக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. 3-ம் நாளான நேற்று நடந்த சிறப்பு பூஜையில் சவுடேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News