செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

திருப்பூரில் இன்று சீமானை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-12 10:12 GMT   |   Update On 2021-10-12 10:12 GMT
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சீமானுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

100 நாள் வேலைத் திட்டத்தை கொச்சைப்படுத்தி சீமான் பேசியதாகவும், விவசாய தொழிலாளர்களை இழிவுபடுத்தி பேசியதாகவும் குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சீமானுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். 30 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
Tags:    

Similar News