ஆன்மிகம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது

Published On 2021-03-20 03:01 GMT   |   Update On 2021-03-20 03:01 GMT
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பால் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றன. முருகப்பெருமானுக்கும் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

அப்போது ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந் தேதி காலையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பறவைக் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல விதமான காவடிகள் எடுத்து வந்தும் பால்குடம் சுமந்து வந்தும் முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

பங்குனி உத்திர திருவிழாவை தொடர்ந்து முருகன் கோவிலில் வருகிற 30-ந் தேதி வரையிலும் தினமும் சிறப்பு பூஜைகள், ஆன்மிக சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
Tags:    

Similar News