உள்ளூர் செய்திகள்
பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு

மாநில மாநாட்டிற்கு பிறகு தமிழக வணிகர்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள்

Published On 2022-05-05 10:25 GMT   |   Update On 2022-05-05 10:25 GMT
இந்த மாநில மாநாட்டிற்கு பின தமிழக வணிகர்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள் என பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சி:

திருச்சி    சமயபுரத்தில் நடைபெற்று வரும் வணிகர் விடியல்    மாநாட்டில் தமிழ்நாடு    வணிகர் சங்கங்களின்   பேரமைப்பு மாநில  பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு    வரவேற்று பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த  10  ஆண்டுகளாக வணிகர்கள் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தார்கள் என்பதை இங்கு வந்திருக்கும் அனைவருக்கும்   தெரியும். அப்போதெல்லாம்   வணிகர்கள்   மத்தியில்   ஆட்சி மாற்றம் ஏற்படதா தி.மு.க. ஆட்சி   வராதா,   என்ற எண்ணம் மேலோங்கியது.  

இன்று   ஆட்சி   மாறி காட்சிகளும்   மாறியுள்ளன. ஆனால்  சில  அதிகாரிகள் வணிகர்களுக்கு     சில இன்னல்களை தந்து கொண்டு இருக்கிறார்கள். இநத மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து  கொள்கிறார்.

இந்த மாநாடு முடிந்ததும  நாளை முதல் தமிழக வணிகர்கள்   தலை   நிமிர்ந்து நடக்கும் சூழல் ஏறபடும். இது வெற்றி மாநாடாக அமையும்.  

இவ்வாறு  அவர்  பேசினார்.
Tags:    

Similar News