உள்ளூர் செய்திகள்
கத்திரிக்கோல்

நடத்தை சந்தேகத்தால் பெண்ணை கத்திரிக்கோலால் குத்திய கணவர்

Published On 2021-12-15 10:21 GMT   |   Update On 2021-12-15 10:21 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பால்மணி (வயது49). இவரது மனைவி பரிபூரணம் (45) . இவர்களுக்கு ஜான்சிமேரி, சரண்யா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

பால்மணி, தனது மனைவி பரிபூரணம் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுவது வழக்கம்.

நேற்று மதியம் மீண்டும் பால்மணி, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மனைவியின் தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அக்கம், பக்கத்தினர் பரிபூரணத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிபூரணம் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்ய வேந்தன் வழக்குப்பதிவு செய்து பால்மணியை தேடி வருகிறார்.
Tags:    

Similar News