ஆன்மிகம்
ஏகம்மை

ஆலங்குடி அருகே ஏகம்மை கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-07-28 05:01 GMT   |   Update On 2021-07-28 05:01 GMT
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் உள்ள ஏகம்மை கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் கிடாய் வெட்டி சமைத்து ஏகம்மைக்கு படைக்கப்பட்டது.
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் ஏகம்மை கோவில் உள்ளது. இக்கோவிலில் வாண்டையார் வகையறாக்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஏகம்மைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இரவு 12 மணி அளவில் கிடாய் வெட்டி சமைத்து ஏகம்மைக்கு படைக்கப்பட்டது. அதன்பின் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு கறி சாப்பாடு போடப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News