செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று முதலமைச்சர் பழனிசாமி 2-வது நாளாக பிரசாரம்

Published On 2019-10-17 04:38 GMT   |   Update On 2019-10-17 04:38 GMT
விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்கட்டமாக கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அதன் பின்னர் நேற்று 2-வது கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது காணை, மாம்பழப்பட்டு, கெடார், மாத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டினார்.

இன்று அவர் 2-வது நாள் பிரசாரத்தை விக்கிரவாண்டி தொகுதியில் மேற்கொள்கிறார். பகல் 1 மணிக்கு விராட்டிக்குப்பத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி, தும்பூர், முட்டத்தூர், பனமலை, அன்னியூர், கடையம் ஆகிய கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
Tags:    

Similar News