செய்திகள்
தற்கொலை

ஓசூரில் தனியார் நிறுவன மானேஜர் தற்கொலை

Published On 2019-10-17 15:04 GMT   |   Update On 2019-10-17 15:04 GMT
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தனியார் நிறுவன மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில மாதங்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்ட இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாதேஸ்வரனுக்கு பூர்ணிமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News