அந்தியூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே இந்த வங்கியின் ஏ.டி.எம் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம கும்பல் புகுந்தது. அந்த கும்பல் கடப்பாரை உள்பட பயங்கர ஆயுதங்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவரால் முடியவில்லை.
ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்தம் ஒலித்தது. இதனைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் கொள்ளையர்கள் தங்கள் திட்டத்தை கைவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இதுகுறித்து அந்தியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி, குற்றப்பிரிவு போலீசார் திருநாவுக்கரசு, செந்தில் குமார் உள்பட பல்வேறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வங்கி ஏ.டி.எம்.மில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நல்ல வேளையாக அலாரம் ஒலித்ததால் பொதுமக்கள் திரண்டு வந்ததன் காரணமாக கொலையாளிகள் தப்பிச் சென்றனர். இதனால் பல லட்ச ரூபாய் தப்பியது.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.