ஆன்மிகம்
நம் மனதினையும் கண்களையும் விட்டகலாத திருக்கோலம் அழகன் முருகனின் திருக்கோலங்களாகும். பதினாறு கோலங்களில் முருகன் அருளாட்சி புரிகின்றான்.
நம் மனதினையும் கண்களையும் விட்டகலாத திருக்கோலம் அழகன் முருகனின் திருக்கோலங்களாகும். பதினாறு கோலங்களில் முருகன் அருளாட்சி புரிகின்றான்.
சக்திதரன் - ஒரு முகம். இரு கரங்கள். சக்திப்படையுடன் காட்சியளிப்பவர்.
ஸ்கந்தன் - இடையில் கௌபீணம் மட்டும் தரித்து தண்டம் பற்றிய பழனி ஆண்டியின் திருக்கோலம்.
கஜவாகனன் - யானை மீதமர்ந்து நான்கு கரங்களுடன் கொண்ட கோலம்.
சரவணபவனன் - பன்னிரு கரங்கள், ஒரு முகம், ஆறு குழந்தையாகத் தோன்றி அம்பிகையால் ஒரு முகமாக மாற்றப்பட்ட திருக்கோலம்.
தேவசேனாபதி - இந்திரனின் மகளான தெய்வயானையை மணந்த கோலம். ஆறுமுகம் - பன்னிருகரங்கள்.
சுப்பிரமணியன் - ஒரு முகம், நான்கு கரங்கள், ஆயுதம் பற்றிய கீழ்க்கரங்களால் அபயம், வரதம் அளித்து அருளும் கோலம் கொண்டவன்.
கார்த்திகேயன் - ஆறுமுகங்களும் ஆறு கரங்களும் உடையவன். அபய-வரமளிக்கும் கரங்கள். பிற கரங்களில் ஆயுதங்கள்.
குமரன் - நான்கு கரங்களுடன் தேவியான தெய்வயானை வலப்புறத்தில் அமைய நின்ற திருக்கோலத்தில் அருள்பவன்.
ஷண்முகன் - ஆறுமுகங்களோடு பன்னிரு கரங்கள் ஆயுதங்கள் ஏந்திய நிலை. மயில் மீது முருகன் அம்ர்ந்திருக்க அருகில் தேவியர் நின்ற கோலம்.
தாரகாரி - சூரபத்மனின் தம்பியான தாரகாசுரனை அழிக்கப் பூண்ட கோலம். ஆறுமுகம் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்திய போர்த் திருக்கோலம்.
வள்ளிமணாளன் - தமிழரின் பண்பாடான களவு ஒழுக்கத்தின் மூலம் காதல்கொண்டு கடுமணம் புரிந்த கோலம்.
பாலமுருகன் - சிறிய பாலக வடிவம், ஒரு கரத்தில் தாமரை மலர்கள் , மற்றொரு கரத்தை இடைமீது இருத்திய அழகிய தோற்றம்.
சேனாளி - ஆறுமுகம் - பன்னிரு கரங்கள், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை , ஏனைய கரங்களில் ஆயுதங்கள்.
கிரௌஞ்சபேதன் - தாரகன், சூரனின் தம்பி இவன் கிரௌஞ்சமலை என்ற மலையின் வடிவில் தனது அண்ணனின் கோட்டையைக் காத்து நின்றான். சக்திவேலின் மூலம் அவனை அழித்து நின்ற திருக்கோலம். ஆறுமுகம், ஆயுதம் தாங்கிய பன்னிருத் திருக்கோலங்கள்!
சிகிவாகனன் - சூரனின் சம்ஹாரத்திற்குப் பின் மயிலான அசுரனின் மீது அமர்ந்த கோலம்!
பிரம்ம சாஸ்தா - பிரணவத்தின் பொருளறியா பிரம்மனை சிறையிலடைத்து, தானே அவரது படைப்புத் தொழிலை ஏற்றதால், பிரம்மனது பொருட்களான அக்கமாலை, கெண்டி ஏந்திய திருக்கோலம்.
சக்திதரன் - ஒரு முகம். இரு கரங்கள். சக்திப்படையுடன் காட்சியளிப்பவர்.
ஸ்கந்தன் - இடையில் கௌபீணம் மட்டும் தரித்து தண்டம் பற்றிய பழனி ஆண்டியின் திருக்கோலம்.
கஜவாகனன் - யானை மீதமர்ந்து நான்கு கரங்களுடன் கொண்ட கோலம்.
சரவணபவனன் - பன்னிரு கரங்கள், ஒரு முகம், ஆறு குழந்தையாகத் தோன்றி அம்பிகையால் ஒரு முகமாக மாற்றப்பட்ட திருக்கோலம்.
தேவசேனாபதி - இந்திரனின் மகளான தெய்வயானையை மணந்த கோலம். ஆறுமுகம் - பன்னிருகரங்கள்.
சுப்பிரமணியன் - ஒரு முகம், நான்கு கரங்கள், ஆயுதம் பற்றிய கீழ்க்கரங்களால் அபயம், வரதம் அளித்து அருளும் கோலம் கொண்டவன்.
கார்த்திகேயன் - ஆறுமுகங்களும் ஆறு கரங்களும் உடையவன். அபய-வரமளிக்கும் கரங்கள். பிற கரங்களில் ஆயுதங்கள்.
குமரன் - நான்கு கரங்களுடன் தேவியான தெய்வயானை வலப்புறத்தில் அமைய நின்ற திருக்கோலத்தில் அருள்பவன்.
ஷண்முகன் - ஆறுமுகங்களோடு பன்னிரு கரங்கள் ஆயுதங்கள் ஏந்திய நிலை. மயில் மீது முருகன் அம்ர்ந்திருக்க அருகில் தேவியர் நின்ற கோலம்.
தாரகாரி - சூரபத்மனின் தம்பியான தாரகாசுரனை அழிக்கப் பூண்ட கோலம். ஆறுமுகம் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்திய போர்த் திருக்கோலம்.
வள்ளிமணாளன் - தமிழரின் பண்பாடான களவு ஒழுக்கத்தின் மூலம் காதல்கொண்டு கடுமணம் புரிந்த கோலம்.
பாலமுருகன் - சிறிய பாலக வடிவம், ஒரு கரத்தில் தாமரை மலர்கள் , மற்றொரு கரத்தை இடைமீது இருத்திய அழகிய தோற்றம்.
சேனாளி - ஆறுமுகம் - பன்னிரு கரங்கள், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை , ஏனைய கரங்களில் ஆயுதங்கள்.
கிரௌஞ்சபேதன் - தாரகன், சூரனின் தம்பி இவன் கிரௌஞ்சமலை என்ற மலையின் வடிவில் தனது அண்ணனின் கோட்டையைக் காத்து நின்றான். சக்திவேலின் மூலம் அவனை அழித்து நின்ற திருக்கோலம். ஆறுமுகம், ஆயுதம் தாங்கிய பன்னிருத் திருக்கோலங்கள்!
சிகிவாகனன் - சூரனின் சம்ஹாரத்திற்குப் பின் மயிலான அசுரனின் மீது அமர்ந்த கோலம்!
பிரம்ம சாஸ்தா - பிரணவத்தின் பொருளறியா பிரம்மனை சிறையிலடைத்து, தானே அவரது படைப்புத் தொழிலை ஏற்றதால், பிரம்மனது பொருட்களான அக்கமாலை, கெண்டி ஏந்திய திருக்கோலம்.