உள்ளூர் செய்திகள்
வாலிபர் மோகன்ராஜ்

திருமணமாக இருந்த நிலையில் பாம்பு கடித்து வாலிபர் சாவு

Published On 2022-05-05 07:59 GMT   |   Update On 2022-05-05 07:59 GMT
குடவாசலில் அடுத்த மாதம் திருமணமாக இருந்த நிலையில் பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்தார்.
நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு தெருவை சேர்ந்த் நீலமோகன் மகன் மோகன்ராஜ் (வயது26). இவர் தனியார் நிறுவனத்தில்வி ற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.

இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து,  பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் நிச்சயம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. 

இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கீற்று கொட்டகையில் அமர்ந்திருந்த போது நல்ல பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. உடன் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண கனவுடன் இருந்த இளைஞர், பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News