செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரியை முதன்மை மாவட்டமாக்க நடவடிக்கை - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேட்டி

Published On 2021-06-09 12:12 GMT   |   Update On 2021-06-09 12:12 GMT
இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தினை மாற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளபடி, தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தேவையான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 80 சதவீதம் தொழிலாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நீலகிரி மாவட்டம் சிறிய மாவட்டமாகவும், குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக உள்ளதால், அரசு தெரிவித்துள்ள வயதிற்குட்பட்டவர்கள் அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக் கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் 5.8 லட்சம் நபர்கள் உள்ளனர்.

இதில் இதுவரை சுமார் 2 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 3.8 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி பெறப்பட்டு, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தினை மாற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News