செய்திகள்
புதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மழை காரணமாக புதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் 3 நாட்களுக்கு (வியாழன், வெள்ளி, சனி) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 4-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மழை காரணமாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் 3 நாட்களுக்கு (வியாழன், வெள்ளி, சனி) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 4-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மழை காரணமாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.