செய்திகள்
ரெயில்

பெங்களூரு-சென்னை சதாப்தி ரெயில்கள் ரத்து: தென்மேற்கு ரெயில்வே தகவல்

Published On 2020-11-21 04:26 GMT   |   Update On 2020-11-21 04:26 GMT
பயணிகள் வருகை குறைந்ததால் பெங்களூரு-சென்னை சதாப்தி ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீபாவளி, சாத், துர்கா பூஜை பண்டிகைகளையொட்டி பெங்களூரு-சென்னை இடையே இருமார்க்கமாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள்(வண்டி எண்:-02027/02028) இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. பயணிகள் வருகையும் குறைவாக உள்ளது.

இதனால் 21-ந் தேதி (அதாவது இன்று) முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை பெங்களூரு-சென்னை இடையே இயங்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News