செய்திகள்
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.