செய்திகள்
பெலகாவி பாந்தர்ஸ்

கர்நாடக பிரிமீயர் ‘லீக்’கில் சூதாட்டம்: பெலகாவி பாந்தர்ஸ் அணி சஸ்பெண்ட்

Published On 2019-11-08 10:05 GMT   |   Update On 2019-11-08 10:09 GMT
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வீரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கர்நாடக பிரிமீயர் ‘லீக்’கின் பெலகாவி பாந்தர்ஸ் அணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன் 8-வது சீசன் போட்டி கடந்த ஆகஸ்டு மாதம் முடிந்தது. இந்த போட்டியில் சூதாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதுகுறித்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னணி வீரர்களான கவுதம், அப்ரார் காஜி ஆகியோர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். முதல்தர வீரரான கவுதம் ஐ.பி.எல். போட்டியில் 3 அணிகளில் விளையாடி இருக்கிறார். இறுதிப்போட்டியின் போது இருவரும் மெதுவாக பேட்டிங் செய்வதற்காக தலா ரூ.20 லட்சம் வாங்கியது தெரியவந்தது.

இந்த நிலையில் கே.பி.எல். போட்டியில் விளையாடும் அணியில் ஒன்றான பெலாகவி பாந்தர்ஸ் அணியை கர்நாடக கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்டு செய்துள்ளது. அந்த அணியின் உரிமையாளர் அலிப் அஷ் பாக் தாரா ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தார். அதன் அடிப்படையில் அந்த அணி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது.

எந்த ஒரு அணியின் உரிமையாளரோ, நிர்வாகிகளோ சூதாட்டத்தில் ஈடுபட்டால் அந்த அணி நீக்கம் செய்யப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் எச்சரித்துள்ளது.
Tags:    

Similar News