செய்திகள்
விபத்து பலி

மதுராந்தகம் அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்- மனைவி பலி

Published On 2021-01-20 12:41 GMT   |   Update On 2021-01-20 12:41 GMT
மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்- மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த பேரமனூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆதிலட்சுமி (40).

சீனிவாசன் மதுராந்தகத்தை அடுத்த மொறப்பக்கத்தில் உள்ள தன்னுடைய தங்கை வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சியி்ல் பங்கேற்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் என்ற இடத்தில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு ஆகியோர் விரைந்து சென்று அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான சீனிவாசன், ஆதிலட்சுமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Tags:    

Similar News