செய்திகள்
மதுரை அணியின் துவக்க வீரர்கள்

டிஎன்பிஎல் கிரிக்கெட்- ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் டாஸ் வென்று பீல்டிங்

Published On 2021-08-02 14:22 GMT   |   Update On 2021-08-02 14:22 GMT
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர்களாக பிரவீன் குமார், சுகேந்திரன் களமிறங்கினர்.

மதுரை அணி: பிரவீன் குமார் (விக்கெட் கீப்பர்), அருண் கார்த்திக், அனிருத் சீதா ராம், என்எஸ் சதுர்வேத் (கேப்டன்), ஜெகதீசன் கவுசிக், சுகேந்திரன், கே.தீபன் லிங்கேஷ், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், ஆர்.சிலம்பரசன், வி.கவுதம், பி.ராக்கி.

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி: எஸ்.தினேஷ், எஸ்.அரவிந்த், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), மான் பஃப்னா, பி.பிரான்சிஸ் ரோகின்ஸ், எம்.முகமது (கேப்டன்), ஆர்.ராஜ்குமார், அஃபான் காதர், அல்லிராஜ் கருப்புசாமி, அஸ்வின் கிறிஸ்ட், எஸ்.மோகன் பிரசாத்.
Tags:    

Similar News