ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய 7 நாட்கள் தடை

Published On 2021-08-12 08:52 GMT   |   Update On 2021-08-12 08:52 GMT
கீழே குறிப்பிட்ட நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய 7 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையின்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 11-ந்தேதி (ஆடிபூரம்) மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளான 13, 14, 15, 20, 21, 25 ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

எனினும் வழக்கமான பூஜைகள் ஆகம முறைப்படி அந்தந்த நேரத்தில் நடைபெறும். இந்த குறிப்பிட்ட நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News