செய்திகள்
மொபட்டில் சென்ற போது தனியார் பஸ் மோதிய விபத்தில் சிறுவன் பலி
கோவை அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் ராசித் (வயது 16). இவர் டவுன்ஹாலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அதே பகுதியை சேர்ந்த நண்பரான ராஜ்குமார் (17) என்ற சிறுவனின் மொபட் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.
மொபட் பாலக்காடு ரோடு, இடையர்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராசித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராஜ்குமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.