செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மாணவர்கள் - ஆசிரியர்கள் 36 பேருக்கு கொரோனா

Published On 2021-09-18 09:11 GMT   |   Update On 2021-09-18 09:11 GMT
வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவர் ஒருவர், பொங்கலூர் பி.வி.கே.என்.மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி ராஜலட்சுமி கொங்குசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் 2 மாணவிகள், 10-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகள், 2 மாணவர்கள் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அதேபோல வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவர் ஒருவர், பொங்கலூர் பி.வி.கே.என்.மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவர், மூலனூர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவர், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் என மொத்தம் 10 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கனவே மாணவர்கள், ஆசிரியர்கள் என 36 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News