செய்திகள்
விராலிமலை அருகே கார் மோதி பெண் பலி
விராலிமலை அருகே கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
ஆலங்குடி தாலுகா கோவிலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் அனுஜா (வயது 22). இவர் விராலிமலை அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று ஸ்கூட்டரில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தல்பட்டி அருகே உள்ள பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் தூத்துக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அனுஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கார் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த சையது இப்ராஹிம் (46) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.