ஆட்டோமொபைல்
இந்தியாவில் ஜீப் காம்பஸ் திரும்பப் பெறப்படுகின்றன: காரணம் இது தான்
ஜீப் இந்தியா நிறுவனம் தனது பிரபல காம்பஸ் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
பாதுகாப்பு காரணங்களுக்காக ஜீப் இந்தியாவின் பிரபல காம்பஸ் மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலத்தின் போது ஏர் பேக் பயனற்று போகும் கோளாறு ஏற்படுவதால் வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
சர்வதேச அளவில் பிரபல எஸ்.யு.வி. மாடல் சிறிய எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 8,000 காம்பஸ் எஸ்.யு.வி. விற்பனையாகியுள்ளது. இவற்றில் 1200 யுனிட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
தற்சமயம் திரும்ப பெறப்பட்டுள்ள ஜீப் காம்பஸ் மாடல்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான யுனிட்களிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஜீப் காம்பஸ் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு முன்பக்க ஏர் பேக்களை மாற்றுவதற்கான நேரம் ஒதுக்குவது குறித்து கேட்கப்படும் என கூறப்படுகிறது.
விற்பனையாளர்களிடம் ஏர் பேக்களின் டேஷ்போர்டு இலவசமாக மாற்றித்தரப்படும். பிழை காரணமாக காயங்கள், விபத்து அல்லது வாரண்டி உள்ளிட்டவை ஏற்படவில்லை என ஜீப் தெரிவித்துள்ளது.
ஏர்பேக் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் ஏற்பட்டுள்ள பிழை காரணமாக ஏர்பேக் பன்ச்சர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனால் ஆபத்து காலங்களில் ஏர்பேக் பயன்படாமல் இருக்கும். இந்த பிரச்சனை வலது புற ஓட்டுநர் இருக்கை இருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி இடதுபுற ஓட்டுநர் இருக்கை கொண்ட வாகனங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் மட்டும் 7000 இடது புற ஓட்டுநர் இருக்கை கொண்ட வாகனங்களை திரும்ப பெறுவதாக ஜீப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட காம்பஸ் எஸ்.யு.வி.க்களை தயாரிக்கும் பணிகள் செப்டம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை தயாரிக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஜீப் இந்தியாவின் பிரபல காம்பஸ் மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலத்தின் போது ஏர் பேக் பயனற்று போகும் கோளாறு ஏற்படுவதால் வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
சர்வதேச அளவில் பிரபல எஸ்.யு.வி. மாடல் சிறிய எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 8,000 காம்பஸ் எஸ்.யு.வி. விற்பனையாகியுள்ளது. இவற்றில் 1200 யுனிட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
தற்சமயம் திரும்ப பெறப்பட்டுள்ள ஜீப் காம்பஸ் மாடல்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான யுனிட்களிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஜீப் காம்பஸ் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு முன்பக்க ஏர் பேக்களை மாற்றுவதற்கான நேரம் ஒதுக்குவது குறித்து கேட்கப்படும் என கூறப்படுகிறது.
விற்பனையாளர்களிடம் ஏர் பேக்களின் டேஷ்போர்டு இலவசமாக மாற்றித்தரப்படும். பிழை காரணமாக காயங்கள், விபத்து அல்லது வாரண்டி உள்ளிட்டவை ஏற்படவில்லை என ஜீப் தெரிவித்துள்ளது.
ஏர்பேக் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் ஏற்பட்டுள்ள பிழை காரணமாக ஏர்பேக் பன்ச்சர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனால் ஆபத்து காலங்களில் ஏர்பேக் பயன்படாமல் இருக்கும். இந்த பிரச்சனை வலது புற ஓட்டுநர் இருக்கை இருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி இடதுபுற ஓட்டுநர் இருக்கை கொண்ட வாகனங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் மட்டும் 7000 இடது புற ஓட்டுநர் இருக்கை கொண்ட வாகனங்களை திரும்ப பெறுவதாக ஜீப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட காம்பஸ் எஸ்.யு.வி.க்களை தயாரிக்கும் பணிகள் செப்டம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை தயாரிக்கப்பட்டது.