செய்திகள்
அமைச்சர் பொன்முடி

பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு அக். 25-ந்தேதி தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Published On 2021-10-11 06:50 GMT   |   Update On 2021-10-11 06:50 GMT
தமிழக பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 31 ஆயிரம் மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ள நிலையில், வருகிற 25-ந்தேதி முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்க இருக்கிறது.
பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 31 ஆயிரம் மாணவ- மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத ஒதுக்கீடு இந்த ஆண்டு கடைபிடிக்கப்படவில்லை.

பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு வருகிற 25-ந்தேதி தொடங்கப்படும். பயோ டெக்னாலஜி படிப்புக்கு நிதி உதவி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News