செய்திகள்
சேலம் அருகே ரெயில் மோதி முதியவர் பலி
சேலம் அருகே ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள மேக்னசைட்-ஜங்ஷன் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் 65 வயதுடைய முதியவர் ஒருவர் ரெயில் மோதி தண்டவாள பகுதியில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் முதியவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.